திருவண்ணாமலை மாவட்டத்தில் நிர்வாகக்
காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்க்காணல் வரும் 24, 25,
26-ம் தேதிகளில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர்
அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு வரும் 24, 25-ம் தேதிகளிலும், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு
வரும் 26-ம் தேதியும் மாவட்டத்தில் உள்ள 18
ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெறும்.எனவே,
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து
நேர்க்காணல் கடிதம் கிடைக்கப்பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த நேர்க்காணலில்
கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.